Being Salt and Light in Zurich
horse

ஜெயமோ கர்த்தரால் வரும்

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.    நீதிமொழிகள்-21:31

அநேக காரியங்களில், வெற்றி காண்பேன் என்று பல கனவுகளை கண்டு, தோல்வியுற்றிருக்கும் நண்பனே! இதோ, இந்த காலைவேளையில், உங்களை நோக்கி வரும் கர்த்தருடைய வார்த்தை ஜெயமோ கர்த்தரால் வரும்

உங்களது தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப வாழ்விலோ அல்லது பிள்ளைகள் வாழ்விலோ தோல்விகளை கண்டு துவண்டு போனீர்களோ? வாழ்வில் இனி ஒன்றுமில்லை, மரணம் தான் இனி முடிவு என்ற எண்ணத்தோடு இருக்கிறீர்களா?

நடந்த ஒரு சம்பவத்தை எழுத வாஞ்சிக்கிறேன். ஒருமுறை, தேவ செய்தியை ஆலயத்தில் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, புதிதாக ஒரு இளைஞன் வந்திருந்தார். ஆராதனை முடிந்த பிறகு, அவர் என்னை வந்து சந்தித்தார். அவர் என்னிடம் கூறியதை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பார்ப்பதற்கு மிகவும் அழகாக அலங்காரம் செய்திருந்த அவர் உள்ளத்தில், வெறுமையும் வேதனையும் நிறைந்தவராக காணப்பட்டார். அவர் என்னைப் பார்த்து சொன்ன முதல் வார்த்தை – “நான் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவன். எனது சமய வழக்கத்தின்படி, இப்படி நாகரீகமற்ற முறையில் சிகை அலங்காரம் செய்வது தவறு என்பதை அறிவேன். மது அருந்துவது மற்றும் அநேக தீய பழக்கவழங்களை உடையவனாக இருக்கிறேன். தெய்வ நம்பிக்கை எனக்கில்லை. ஆனால், உங்கள் செய்தி என்னோடு பேசியது. எனவேதான் உங்களை சந்திக்க விரும்பினேன் ” என்று தனது வாழ்வில் நடந்த சோகத்தினை, என்னோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். அதாவது படிக்கும்போது ஒரு பெண்ணை நேசித்தேன், அவள் என்னை ஏமாற்றினாள். படிக்கவேண்டும் என்று நினைத்தேன், அதிலும் தோல்வி! சரி, வியாபாரம் செய்வோம் என்று நினைத்தேன், அதிலும் நஷ்டம் ஏற்பட்டது! கடைசியாக, வெளிநாடு போவோம் என்று இங்கு வந்தேன். இந்த நாடும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆனால், உங்கள் செய்தியில், உலர்ந்த எழும்புகள் உயிரடையும் என்றீர்களே, அந்த வார்த்தை என்னோடு பேசியது என்று, கண்ணீரோடு தன் கதையை சொல்லி முடித்தார். அவருக்கு அன்று நான் சொன்ன பதில் – நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், ஒருவரையும் புறம்பே தள்ளாத அன்புள்ள இயேசு அன்போடு உங்களை அழைக்கிறார். அவரிடம் வாருங்கள். உங்கள் வாழ்வை முற்றுமாய் அர்ப்பணியுங்கள். அவர் உங்கள் தோல்விகளை வெற்றியாக மாற்றித் தருவார் என்றேன். இருவரும் ஜெபித்தோம். அற்புதம் நடந்தது. மறுபடியும் அவரை சந்தித்த போது, மலர்ந்த முகத்துடன் தான் வேலை செய்கிறேன் என்றார். அவருக்கு அற்புதம் செய்த இயேசு, உங்களுக்கும் அற்புதம் செய்வார். ஜெயமோ கர்த்தரால் வரும்.  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/

Live

0 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *