Site icon Bethel Tamil Christian Church Switzerland

நீதிமான் வளருவான்

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்    சங்கீதம்-92:12

தேவ பிள்ளையே, இந்த சமுதாயத்தில் வாழுகிற நாம், நம்முடைய பிள்ளைகள் வாழ்வில் குடும்ப வாழ்வில், மகிழ்ச்சி கண்டு மகிழவேண்டும். நாம் அப்படிப்பட்ட மகிழ்ச்சி காணவேண்டுமானால், நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்க ஒருவர் வேண்டும். அப்படியானால் அவர் யார்? அவர்தான் நமதன்புள்ள ஆண்டவர்.

நம்முடைய பிள்ளைகள் கல்வியில் முன்னேற வேண்டும். நம்முடைய தொழிலில் முன்னேற்றம் காணப்படவேண்டும். குடும்பத்தின் தேவை சந்திக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான், அளவில்லா மகிழ்ச்சி காணப்படும். அப்படியானால் ஒரு வளர்ச்சி தேவை. அதை நாம் ஆண்டவரிடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நாம் முதலாவது நீதிமான்களாக மாற்றப்பட வேண்டும். வாசித்துப்பாருங்கள்

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். யோவான்-9:31

அப்படியானால் நீதிமான்களுக்கு செவி கொடுக்கிறார். அவர்கள் யார்? தேவபக்தியுள்ளவர்கள், தீமையை வெறுக்கிறவர்கள், பொல்லாப்புக்கு தங்கள் கால்களை விலக்கி அநீதி செய்யாதிருக்கிறவர்கள் நீதிமான்கள்.

அவர்கள் மேல் கர்த்தருடைய கண்கள் நோக்கமாயிருக்கிறது. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. சங்கீதம்-34:15

ஒரு தாய் தன் பிள்ளையின் மேல் நோக்கமாக இருக்கும் போது, அந்த பிள்ளையின் முன்னேற்றத்திற்காக மிகவும் பிரயாசப்படுகிறார்கள். அது போல, தாயிலும் மேலான நமதாண்டவர், நம்முடைய வளர்ச்சியைக் குறித்து கண்ணோக்காமல் இருப்பாரோ? எனவே விசுவாசியுங்கள்! உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப் போல் வளரச் செய்வார்  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version